द्वितीयस्तबकः

जगद्गुरुवरोऽथ स प्रथितवैभवाढ्यो निजं
प्रधानमधिकारिणं स्वकसमीपमाहूय तम् ।
क्रमेण जययात्रया बहिरटाम ईशाज्ञया
चलेदगतनूभुवो महितकर्णभूषोत्सवः ॥ १ ॥
इति श्रीचन्द्रमौलीश्वरः सङ्कल्पयति, तस्माद्विजययात्रोचितं सर्वमपि साधनं सज्जीकृत्य, नातिविलम्बेन प्रस्थानोचित-सुमुहूर्तोऽपि निर्णीयतामिति समादिशत् ॥ सर्वाधिकारी, “तथैव सज्जीकरोमि शीघ्रं सर्वम्” इति गृहीताज्ञः, स्वीयकार्यालयमासाद्य, सर्वेषामपि निदेशकारिणां निकटे एवमाज्ञापयत् ।
மேன்மை பொருந்திய ஜகத்குரு, தமது ப்ரதான நிர்வாஹியை அழைத்து : “ஒவ்வோரிடமாக விஜய யாத்திரையாகப் புறப்படுவோம். பின் ஈசனின் ஆணைப்படி அம்பாளின் தாடங்க ப்ரதிஷ்டை உத்ஸவம் நடந்தேறும். இது சந்த்ரமௌலீஶ்வரரின் ஸங்கல்பம். ஆகவே கிளம்புவதற்கான சாதனங்களை ஏற்பாடு செய்து அதிக தாமதமின்றி கிளம்புதற்குரிய நல் முஹூர்த்தமும் பாருங்கள்” என்று உத்தரவிட்டார்.
ப்ரதான அதிகாரி “அவ்வாறே விரைவாக எல்லாவற்றையும் தயார் செய்கிறேன்” என்று கூறி அந்த உத்தரவை ஏற்று தனது அலுவலகத்தை அடைந்து வேலை செய்வோர் அனைவருக்கும் அவ்வாறே ஆணையிட்டார்.
श्रीताटङ्कयुगस्य किञ्चिचिदधुना जीर्णस्य तस्यार्थितः
शिष्यैरुद्धरणाय भक्तिभरितैः श्रीदेशिकेन्द्रो भृशम् ।
कारुण्याकुलमानसः सपदि तत्सम्प्रार्थनासक्तहृद्
भूत्वाऽस्माच्च बहिः करिष्यति जयां यात्रां जनान् रक्षितुम्॥
अतः, श्रीविजययात्रायोग्यसामग्र्यः सकला अपि त्वरितमेव सन्नद्धा भवन्तु” इति ।
“குருநாதர் கருணை நிறைந்த மனதுடன், தேய்மானம் அடைந்த காது ஆபரணங்களை சீரமைக்க விரும்பிய தமது அன்பு சிஷ்யர்களின் ஆர்வமான வேண்டுகோளை உடனடியாக ஏற்று, மக்களை ரக்ஷிப்பதற்காக வெளியே விஜய யாத்திரை மேற்கொள்வார். ஆகையால், புனித விஜய யாத்திரைக்கான ஏற்ற அனைத்துப் ஏற்பாடுகளும் விரைவாகத் செய்யப்படட்டும்.” என்று.
भृत्याः पूर्वमेव सिद्धानि भवन्ति निखिलान्यपि साधनानीति न्यवेदयन् । सर्वाधिकारी, सद्यः, विपश्चिदपश्चिमैः विजययात्रोचितं प्रशस्ततरं कमपि मुहूर्तं निश्चित्य श्रीजगद्गुरुसन्निधावपि व्यजिज्ञपत् ॥ श्रीगुरुसार्वभौमोऽपि तथैव क्रियतामिति अङ्गीचकार ।
நிர்வாகிகள் விரைவில் அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். உடனடியாக, பிரதான நிர்வாகி தலைசிறந்த அறிஞர்களுடன் கலந்து விஜய யாத்திரைக்கு ஏற்ற சுபமான நேரத்தை தீர்மானித்து ஜகத்குருவின் ஸன்னிதானத்தில் தெரிவித்தார். அனைத்துலக குருவானவரும் “அப்படியே ஆகட்டும்” என்று ஒப்புதல் அளித்தார்.
अथ, कदाचित्स्वीयश्रीताटङ्कप्रतिष्ठामहोत्सवकरणाय श्रीपरदेवतया प्रेरित इव, निखिलभुवनक्षेमङ्करे शुभकरे मुहूर्तवरे, श्रीजगद्गुरुवरः विजययात्रया स्वास्थानाच्छ्रीमठान्निर्गत्य तत्रैव पट्टणे तदाराधनार्थमहमहमिकया बहुषु शिष्यगणेषु प्रार्थयत्सु सत्सु तत्रैव मासचतुष्टयं निवसन् यथोचितं सर्वानपि परिपूर्णमनोरथान् व्यतानीत् ।
அதன் பின்னர், தாடங்க பிரதிஷ்டை விழாவை நடத்துவதற்காக, பரதேவதையால் உந்தப்பட்டாற்போல் , அனைத்து உலகங்களுக்கும் நன்மை பயக்கும் நல்ல நேரத்தில் ஜகத்குரு தமது மடத்திலிருந்து விஜய யாத்திரையாக வெளியே புறப்பட்டார். அங்கேயே பட்டணத்தில் சிஷ்யர்கள் அதே நகரத்தில் தங்கி அவரை வழிபட ஆர்வமாக வேண்டிக்கொண்டபோது, அவர் அங்கு நான்கு மாதங்கள் தங்கி அனைவரின் விருப்பங்களையும் தக்கவாறு நிறைவேற்றினார்.
एतस्मिन् समये समीपविलसद्ग्रामस्थिता आस्तिका
नीत्वा क्षेमकरं जगद्गुरुवरं ग्रामं निजं सादरम् ।
देशं नश्च नृजन्मसाधुविभवं चाचार्यपादार्चनात्
कार्यं सार्थमिति स्वयं समुदितश्रद्धाभरैर्मेनिरे ॥ ३ ॥
இந்நேரத்தில், அக்கம்பக்க கிராமங்களின் ஆஸ்திக குடிமக்கள், நல்லெண்ணம் கொண்ட ஜகத்குருவை மரியாதையுடன் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து, குருவின் பாதங்களை வழிபடுவதன் மூலம் தங்கள் நிலமும் மனிதப் பிறவியின் புண்ணியமும் அர்த்தமுள்ளதாகும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் கருதினர்.
ततः क्रमेण तत्तद्ग्रामादागतानां मूर्तिमद्भक्तिश्रद्धे इवोज्ज्वलानां प्रार्थयतां छात्रसार्थानां प्रार्थनामुररीकृत्य तद्ग्रामानलङ्कृत्य तदिष्टानुसारं तत्र तत्र त्रीणि चत्वारि पञ्च षडिति दिनानि च क्वचिदेकवारं क्वचिद्वारद्वयं कुत्रचिन्मासमेकं च व्यभूषयत ।
அதன் பின்னர், பக்தியும் சிரத்தையும் உருவெடுத்தாற் போல ஒளிரும் கிராமங்களிலிருந்து வந்த சிஷ்யர்களின் வேண்டுகோளை ஏற்று, படிப்படியாக அவரவர்கள் வந்த கிராமங்களுக்கு அருள் பாலித்து அவர்களின் விருப்பப்படி – சில இடங்களில் மூன்று, நான்கு, ஐந்து அல்லது ஆறு நாட்கள், சில இடங்களில் ஒரு வாரம், சில இடங்களில் இரண்டு வாரம், மற்றும் சில இடங்களில் ஒரு மாதம் வரை தங்கினார்.
गुरुवररचितं तत्पूतमद्वैतभाष्यं
गुरुवरकृपयैव प्राप्यमित्यात्तभक्त्या ।
शरणमुपगतानां शुद्धचित्तोज्ज्वलानां
क्वचन गुरुवरोऽसावन्वगृह्णात्समोदम् ॥ ४ ॥
பெருமைமிக்க (ஶ்ரீ பகவத்பாதர் என்ற) குருவால் இயற்றப்பெற்ற அத்வைத பாஷ்யம் குருவின் அருளால் மட்டுமே பெற முடியும் என்று நம்பி தம்மிடம் சரணடைந்த தூய இதயம் கொண்ட பக்தர்களை சில நேரங்களில் (பாஷ்யபாடத்தின் மூலமாக) அனுக்ரஹித்தார்.
अपि च-
भक्तिपूर्वं क्वचित्साधु वर्णाश्रमा-
चारयोग्यो विभो बोधनीयोऽधुना ।
धर्म इत्यर्थितः शिष्यबृन्देन सो-
पादिशद्देशिकेन्द्रो दयावारिधिः ॥ ५ ॥
மேலும் – “ஐயனே! வெவ்வேறு வர்ணங்கள் மற்றும் ஆஶ்ரமங்களுக்கு ஏற்றவாரான தர்மம் இப்போது முறையாக போதிக்கப்பட வேண்டும்” என்ற சிஷ்யர் குழாம்களால் வேண்டப்பட்டபோது, கருணைக் கடலான குருக்களில் சிறந்த அவர் , பக்தியுடன் உபதேசங்களை வழங்கினார்.
कुहचित्स्थले पवित्रे स्थित्वैकान्ते परे स्वरूपे स्वे ।
संलग्नमना गुरुराट् समाधिवृत्त्या व्यराजदखिलेड्यः ॥
क्वचित्तत्र तत्र स्थितं राजमानं महेशं रमेशं गणेशं गुहं च ।
सहैवात्मशिष्यैर्गतो देशिकेन्द्रो मुदाऽसेवतैष प्रकॢप्तोपचारः॥
சில புனித தலங்களில், குருமார்களின் அரசர் தனிமையில் அமர்ந்து தன் உயர்ந்த நிலையில் லயித்து தியானத்தில் ஆழ்ந்திருந்தார். குருநாதர் தமது சிஷ்யர்களுடன், ஆங்காங்கு வீற்றிருக்கும் மஹேஶர் (சிவன்), ரமேஶர் (விஷ்ணு), கணேஶர், மற்றும் குஹர் (ஸ்கந்தர்) ஆகியோரை முறையாக உபசரித்து மகிழ்ச்சியுடன் வழிபட்டார்.
कुत्रचित्सामान्यशास्त्रवाक्यार्थवर्णनेन अपरत्र निकट-तटाटीकमान-विनमत्पटु-वटुकूटेभ्यः तदुचितेन धर्मोपदेशेन इतरत्र स्वसेवनागत-चण्ड-पण्डित-षण्ड-वर्णित-वाक्यार्थ-परिशोधनेन च परत्र पुण्यतीर्थयात्रया च समयमनैषीत् ।
சில இடங்களில் அவர் பொதுவான தர்மங்களை உபதேசித்தார். வேறு இடங்களில் அருகிலுள்ள நதிக்கரையில் வணங்கும் புத்திசாலி ப்ரஹ்மசாரி மாணவர்களின் குழுக்களுக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கினார். மற்ற இடங்களில் அவரை வணங்க வந்த கடுமையான வாதங்கள் செய்யும் வித்வான்களின் குழுக்களால் விவரிக்கப்பட்ட பகுதிகளின் சாஸ்த்ரார்த்தங்களை ஆராய்ந்தார், மேலும் வேறு இடங்களில் புனித தலங்களுக்கு யாத்திரை செய்தார்.
एतस्मिन्समये कुलक्रमागतप्राभवः अनर्घ-रत्न-परीक्षा-चण्ड-पाण्डित्य-युक्तः धर्मनिकर इव मूर्तिमान् आमध्यम-लोक-विख्यात-निर्मल-यशोलङ्कृतः सकल-जन-श्लाघ्य-सद्वृत्तोज्ज्वलः स्वशरीर-दर्शन-मात्रेणाविष्कृत-महापुरुष-लक्षणः चेन्ननगरीशेखरीभूतः श्रीसदाशिवठाकराख्यः भूसुरवरः श्रीमदखिलाण्डेश्वरीताटङ्कप्रतिष्ठार्थं विजययात्रया बहिर्निर्गतः श्रीलोकगुरुशङ्करभगवत्पादाचार्यवर्य इति कर्णाकर्णिकया श्रुत्वा एतादृशे लोकक्षेमङ्करे श्रीपरदेवताकैङ्कर्ये प्रधानभूतं श्रीताटङ्कपरिष्काररूपं कार्यं स्वेन करणीयमिति श्रीपराशक्ति-सम्भृत-नैसर्गिक-भक्त्या धर्मकार्यसञ्जातश्रद्धया च सद्यः श्रीमदाचार्य-चरण-सरसिज-संसेवनोचित-परिकरेण साकं श्रीगुरुसन्निधिरधिगन्तव्य इति कृतनिश्चयो बभूव ।
இச்சமயம், பாரம்பரிய ஸாமர்த்யத்தால் விலைமதிப்பற்ற ரத்தினங்களை ஆராயும் நிபுணத்துவம் கொண்டவரும், தர்மத்தின் உருவாக விளங்குபவரும், அனைத்து மனிதர்களாலும் அறியப்பட்ட தூய புகழால் அலங்கரிக்கப்பட்டவரும், அனைவராலும் போற்றப்படும் நன்னடத்தையால் பிரகாசிப்பவரும், உடல் தோற்றத்தாலேயே பெரிய மனிதரின் அடையாளங்களை வெளிப்படுத்துபவருமான – சென்னை நகரின் மணிமுடியான பெருமைமிக்க சதாசிவ டாகர், ஶ்ரீமதகிலாண்டேஶ்வரியின் தாடங்க பிரதிஷ்டை செய்வதற்காக வணக்கத்திற்குரிய ஜகத்குரு சங்கரபகவத்பாதாசார்யார் விஜய யாத்திரை மேற்கொண்டிருப்பதை செவிவழியே கேள்வியுற்று, பரதேவதையின் சக்தியால் தூண்டப்பட்டு இயற்கையான பக்தியாலும் தர்மம் செய்யும் கடமையினால் தோன்றிய நம்பிக்கையாலும் உடனடியாக, உலக நன்மைக்கான இந்த தெய்வீக சேவையில் புனித ஆபரணங்களை செப்பனிடும் இந்த முதன்மைப் பணியை தான் செய்ய வேண்டும் என்று நினைத்து, பூஜ்யமான குருவின் திருவடிகளுக்கு சேவை செய்வதற்கு ஏற்ற உபசாரங்களுடன் குருவின் ஸந்நிதானத்தை அடைய உறுதி பூண்டார்.
सद्यः स्वीयजनैश्च चेन्ननगरान्निष्क्रम्य सद्भक्तिकैः
क्षेत्रं सद्गुरुभूषितं स्वयमगाच्छ्रीस्वामिनाथोज्ज्वलम् ।
ज्ञात्वा श्रीगुरुसेवनाय समयं योग्यं सहैवागतै-
र्गत्वा तन्निकटं प्रणाममकरोत्सोऽयं प्रसादाप्तये ॥
உடனே தனது மக்களுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு, ஸத்குருவால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீஸ்வாமிநாதரின் ஒளிமயமான க்ஷேத்ரத்திற்கு (ஸ்வாமிமலை) தானும் சென்றார். புனிதமான குருவுக்கு சேவை செய்வதற்கான உரிய நேரத்தை அறிந்து, தன்னுடன் வந்தவர்களுடன் அவர் அருகில் சென்று அவரது அருளைப் பெறவேண்டி நமஸ்கரித்தார்.
आलोक्य तं प्रभुवरं दृढभक्तियुक्तं
मन्दस्मितोज्ज्वलमुखः करुणार्द्रदृष्टिः ।
नारायणस्मरणपूर्वमनुग्रहं तं
तस्मै व्यधाद्गुरुवरः स महान्समोदम् ॥ ८ ॥
த்ருடமான பக்தி கொண்ட சிறந்த அந்த ப்ரபுவைக் கண்டு, மேன்மைமிக்க குரு, மென்மையான புன்னகையால் ஒளிரும் முகத்துடனும் கருணையால் ஈரமான கண்களுடனும், நாராயண ஸ்மரணம் செய்து ஸந்தோஷத்துடன் அவருக்கு அருள் பாலித்தார்.
एवं प्रणम्योत्थितं सदाशिव-चरणारविन्द-द्वन्द्व-विधृतामन्द-भक्ति-भास्वरं सदाशिवाभिलाषिणं सदाशिवठाकराख्यं साञ्जलिबन्धं तं शिष्यशिरोमणिं स्वसमीपे समुपवेशयत् समुचिते स्थाने भुवनगुरुसार्वभौमः ।
இவ்வாறு, ஸதாசிவனின் திருவடிகளில் கொண்ட தீவிர பக்தியால் ஒளிருபவரும், எப்பொழுதும் நன்மையை நினைப்பவருமான ஸதாசிவ டாக்கர் கைகூப்பி வணங்கி எழுந்த போது, அந்த ஜகத்குருவானவர் தன் சிஷ்யர்களுள் ரத்தினம் போன்ற அவரை தக்க இடத்தில் தன் அருகில் அமர வைத்தார்.
गुरुवरः – अपि कुशलं सर्वेषाम् ?
सदाशिवः – लोकक्षेमदानैकबद्धदीक्षाणां तत्रभवताम् अव्याजानुग्रहपात्रीभूतानां मादृशशिष्यसार्थानाम् कथम् अकुशलवार्तायाः प्रसक्तिः ।।
गुरुवरः – किमिदानीं चेन्ननगरादेवागम्यते ।
सदाशिवः – तस्मादेव ।
श्रीगुरुवरः – श्रीचन्द्रमौळीश्वरदर्शनार्थमेव वा ?
सदाशिवः – श्रीमहास्वामिनामनुग्रहम् आज्ञां च लब्धुम् ।
श्रीगुरुवरः – श्रीचन्द्रमौळीश्वरप्रसादलाभेनैव अस्मदनुग्रहोऽपि सिद्ध एव । नायमर्थः पृथक् प्रयत्नमपेक्षेत । सन्ततमस्मदभिमततरे सकलजनहितकरे सत्कार्ये प्रवृत्तिमासेदुषो भवादृशोऽपि आज्ञाकाङ्क्षा कस्मै? अथवा आचार्यानुमतिपुरःसरमेव कार्यमिति स्वीयशिष्यधर्मपरिपालनायेति भाति । भवतु, कं विषयमुद्दिश्याज्ञाप्रतीक्षा?
ஜகத்குரு: எல்லோரும் நலமாக இருக்கிறார்களா?
ஸதாசிவர்: உலகிற்கு நன்மையை மட்டுமே செய்வதில் உறுதி கொண்ட தங்களிடமிருந்து நிபந்தனையற்ற அருளைப் பெறத் தகுதியுள்ள என் போன்ற சிஷ்யர்களுக்கு நலமின்மை பற்றிய பேச்சுக்குத் தான் இடமேது?
ஜகத்குரு: நீங்கள் இப்போது சென்னையிலிருந்து வருகிறீர்களா?
ஸதாசிவர்: ஆம், அங்கிருந்துதான்.
ஜகத்குரு: ஸ்ரீ சந்திரமௌலீஶ்வரர் தரிசனத்திற்காகவா?
ஸதாசிவர்: மஹாஸ்வாமிகளின் அருளையும் ஆஜ்ஞையையும் பெறவும்.
ஜகத்குரு: ஸ்ரீ சந்திரமௌலீஶ்வரர் அனுக்ரஹத்தைப் பெறுவதன் மூலம், நமது அனுக்ரஹமும் கிடைத்ததாகிறது. இதற்காக தனி முயற்சி வேண்டியதில்லை. நீங்கள் நாம் எப்போதும் அங்கீகரிக்கும் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வு தரும் பயனுள்ள பணியில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் உத்தரவு கேட்பது எதற்கு? அல்லது சிஷ்யராக உங்கள் கடமைகளைப் பேணுபவராக இருப்பதால் செய்யும் பணி குருவின் அனுமதியுடன் தொடங்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அனுமதி கோருவதாகத் தெரிகிறது. சரி, எந்த விஷயத்திற்காக அனுமதியை எதிர்பார்க்கிறீர்கள்?
सदाशिवः – ( उत्थाय सप्रश्रयं साञ्जलिबन्धं च )
सङ्कल्पं च विधाय तत्रभवता पूताखिलाण्डेश्वरी-
ताटङ्कोद्धरणाय तन्यत इयं प्रख्यातयात्राधुना ।
सर्वेषां कुशलाय लोकगुरुराट्स्थाने भृशं भास्वता
शिष्यव्रातकृतार्थनां करुणया स्वीकृत्य देव्याः कृते ॥
इत्थमाकर्ण्य लोकोक्तया समुत्थितकुतूहलः ।
सम्पदां मे च सार्थक्यं सम्पादयितुमागमम् ॥ ९ ॥
श्रीगुरुवरः – अस्मिन्समये इदं कार्यमेवं करणीयमिति नास्माभिः सङ्कल्पितः । किं तु प्राचीनाचार्यसम्प्रदायमनुसृत्य पुण्य-क्षेत्र-निवास-पुण्य-तीर्थ-स्नान-स्वामि-दर्शनादिकं कार्यमुद्दिश्य बहिर्विजययात्रया प्रस्थितं साम्प्रतम् । यदि इदानीमेव स्वीयं ताटङ्कप्रतिष्ठाकार्यं पूरणीयमिति श्रीपरदेवतायाः सङ्कल्पः स्यात्, तदा तदपि चलतु इत्येव ममाभिप्रायः । श्रीताटङ्कप्रतिष्ठामहोत्सवकरणबद्धादरैः लोकैः पुनः एतदर्थमेव विजययात्रास्वीकृतेति तत्र तत्र महानुद्घोषः क्रियते । तत्त्वं पुनरुक्तमेव ।
सदाशिवः – श्रीपराशक्तिसङ्कल्पानुगुणमेव कार्यसिद्धिर्भवेत् । न मादृशैः सामान्यजनैर्मनसाप्यन्यथाचिन्तयितुमपि शक्यते । अथापि तद्विषयं किमपि कैङ्कर्यं विधातुं तत्रभवदीयशासनानुग्रहलाभाय श्रीमत्सन्निधिं प्राप्तोऽस्मि । तदनुग्राह्योऽयं जन इति ।
ஸதாசிவர்: (மரியாதையுடன் எழுந்து கைகூப்பி)
அனைவரின் நலனுக்காக ஜகத்குரு பீடத்தில் தாங்கள் ஒளிர்கிறீர்கள். பவித்ரமான அகிலாண்டேஶ்வரியின் தாடங்களகளை புதுப்பிக்க சிஷ்ய ஸமூஹங்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க கருணையால் ஸங்கல்பித்து, யாத்திரை துவங்கியுள்ளீர்கள் என்பதை கேள்விப்பட்டு, எனக்குள் ஆர்வம் எழுந்தது, எனது செல்வத்தை பயனுள்ளதாக்க வந்துள்ளேன்.
ஜகத்குரு: இந்த நேரத்தில், இந்த பணி இவ்வாறு செய்யப்பட வேண்டும் என்று நாம் ஸங்கல்பிக்கவில்லை. மாறாக, பூர்வாசார்யர்களின் மரபைப் பின்பற்றி, புனித தலங்களில் தங்குவதற்கும், புனித தீர்த்தங்களில் நீராடுவதற்கும், பகவானின் தரிசனத்திற்கும் இப்போது விஜய யாத்திரையை மேற்கொண்டுள்ளோம். இப்போது பரதேவியின் விருப்பப்படி அவளது தாடங்க பிரதிஷ்டை பணி முடிக்கப்பட வேண்டுமெனில், அதுவும் நடக்கட்டும் – இதுவே எனது எண்ணம். புனித தாடங்கங்களை பிரதிஷ்டை செய்யும் பெருவிழாவை நடத்த ஆர்வமுள்ள மக்கள் இந்த நோக்கத்திற்காகவே வெற்றிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது என்று எங்கும் பறைசாற்றுகிறார்கள். யதார்த்தமோ நாம் சொல்லியதே,
ஸதாசிவர்: இப்பணியை முடித்தல் பராசக்தியின் ஸங்கல்பத்திற்கு ஏற்பவே இருக்கும். என்னைப் போன்ற சாதாரண மக்கள் வேறு விதமாக மனதிலும் கூட நினைக்க முடியாது. எனினும், இவ்விஷயத்தில் சில கைங்கர்யங்கள் செய்ய தங்களது ஆஜ்ஞையையும் அனுக்ரஹத்தையும் பெற தங்கள் புனித ஸன்னிதானத்திற்கு வந்துள்ளேன். அவ்வாறு தங்களால் அனுக்ரஹிக்கப்படவேண்டும்
श्रीगुरुवरः – कीदृशं तत्कैङ्कर्यम् ?
सदाशिवः – श्रीमदखिलाण्डनायिकायाः श्रीताटङ्कयुगस्य तत्रभवदाज्ञानुसारं यथाशक्तिसम्यक्परिष्करणरूपमेव ।
श्रीगुरुवरः – श्रीपराशक्तिरेव स्वकार्यपूर्तये भवन्तं प्रावर्तयदिति प्रतिभाति । एतादृशकार्यं सर्वदास्मान्निमित्तीकृत्य भवादृशशिष्यसमूहैरेवानुष्ठेयम् । प्रकृतविषये इदमेव प्रधानं कार्यम् एतच्च निर्दोषरत्ननिचयकल्पनीयतया तादृशरत्नपरीक्षादक्षेण सम्यक् कर्तुं शक्यते ।
सदाशिवः –
नाहं सम्यक्कर्तुं पण्डित इति मे मतिस्तथापि तया ।
देव्यां सहजोद्भवया भक्त्या कृष्टः प्रयत्नमिह करवै ॥
श्रीगुरुवरः – सन्ततविनयविभूषणस्य भवतः नैसर्गिक एवायं व्यवहारः एतत्कार्यकरणे त्वमेवार्ह इति लोकाभिप्रायं निरोद्धुं कथं शक्यते । पूर्वं स्वयमेवागत्य प्रार्थनाकरणेन एतत्कैङ्कर्यं भवन्मुखेनैव स्वस्याः करणीयमिति श्रीजगन्मातुरभिमतोऽपि स्यादिति मन्ये । भवतु तथैव (इत्यन्वग्रहीत्) ।
सदाशिवः – (सद्यः श्रीजगदाचार्यचरणनलिनयोः प्रणिपत्य) अधुनैवास्मत्कुलं पवित्रमासीत्, अर्थश्च सार्थः, जन्म च मे सफलं, यस्मात् सत्स्वपि बहुशिष्यगणेषु मदीयजन्मान्तरीयसुचरितनिचयैः एतादृशपुण्यकैङ्कर्यनिर्वहणे श्रीपरमाचार्यानुग्रहोऽपि लब्धः।
श्रीगुरुवरः – भवादृशानामास्तिकशिखामणीनाम् आजानसिद्धगुरुदेवताभक्तिभूषितानां नैतद् दुर्लभम् ।
सदाशिवः – अधुनैव धन्योऽस्मि ।
ஜகத்குரு: அந்த கைங்கர்யம் என்ன?
ஸதாசிவர்: அது தங்கள் ஆணைகளின்படி, என் திறனுக்கு ஏற்ப ஸ்ரீ அகிலாண்டநாயகியின் தாடங்க ஜோடியை முறையாக செப்பனிடும் பணி தான்.
ஜகத்குரு: பராசக்தியே தனது பணியை நிறைவேற்றுவதற்காக உங்களுக்கு உத்வேகம் அளித்திருப்பதாகத் தெரிகிறது. இத்தகைய பணி எப்போதும் எம்மை நிமித்த காரணமாகக் கொண்டு உங்களைப் போன்ற சீடர்களால் செய்யப்பட வேண்டும். தற்போதைய விஷயத்தில், இதுவே முக்கிய பணி. மற்றும் இதற்கு குறையற்ற ரத்தினங்களை தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளதால், அத்தகைய ரத்தினங்களை ஆராய்வதில் திறமை பெற்றவரால் முறையாக செய்யப்படலாம்.
ஸதாசிவர்: இதை முறையாக செய்ய எனக்குப் போதுமான திறமை இல்லை என்று நினைக்கிறேன். எனினும், தேவியின் மீதான இயற்கையான பக்தியால் ஈர்க்கப்பட்டு, இதில் முயற்சி செய்கிறேன்.
ஜகத்குரு: எப்போதும் விநயத்தால் அலங்கரிக்கப்பட்ட உங்களின் இயல்பான நடத்தை இது. இப்பணியை செய்ய நீங்கள் மட்டுமே தகுதியானவர் என்ற பொதுமக்களிடையே நிலவும் அபிப்ராயத்தை எப்படி தடுக்க முடியும்? நீங்களே முன்வந்து கேட்பதன் மூலம், இந்த கைங்கர்யம் உங்கள் மூலமாகவே செய்யப்பட வேண்டும் என்பது லோக மாதாவின் விருப்பமாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்படியே ஆகட்டும்.
ஸதாசிவர்: (இப்போது உலக குருவின் பாத கமலங்களில் ஸாஷ்டாங்கமாக வணங்கி), பல ஸமூஹத்திலிருந்தும் சிஷ்யர்கள் இருந்தும், என் முந்தைய பிறவிகளின் நற்செயல்களின் சேர்க்கையால், இத்தகைய புனித சேவையை செய்ய பரம குருவின் அருளைப் பெற்றதால், என் குலம் புனிதமாகியது, என் செல்வம் அர்த்தமுள்ளதாயிற்று, என் பிறவி பலனளித்தது.
ஜகத்குரு: குரு மற்றும் தெய்வங்கள் மீதான அசையாத பக்தியால் அலங்கரிக்கப்பட்ட, ஆஸ்திகர்களின் ரத்தினம் போன்ற உங்களைப் போன்றவர்களுக்கு இது கடினமானதல்ல.
ஸதாசிவர்: இப்போதே நான் தன்யன் ஆனேன்
श्रीगुरुवरः “अस्मात्प्रतिनिवर्तनसमये श्रीजम्बुनाथक्षेत्रमासाद्य श्रीजम्बुनाथाखिलाण्डेश्वरीदर्शनादिकं विधाय तत्पूजकमुखेन ताटङ्कयुगळमपि यथापरिष्करणयोग्यं सम्यक् वीक्ष्य सौकर्यानुसारं गम्यताम्” इत्यवादीत् ।
सदाशिवः “गृहीतः शिरसा श्रीमदनुग्रहः” इति सप्रणामं प्रसादं गृहीत्वा प्राप्तानुज्ञो बहिरयासीत् ।
तत्र स्थित्वा दिनयुगमथ श्रीजगद्देशिकेन्द्रा-
दाप्तानुज्ञो विमलसरितालङ्कृतं सह्यपुत्र्या ।
क्षेत्रं तादृग्लषितफलदं जम्बुनाथीयमाप्य
श्रीमच्छम्भुं व्यनमदखिलाण्डेश्वरीं दिव्यमूर्तिम् ॥
निवसन्दिनमेकमत्र मोदा
दपि ताटङ्कयुगं निरीक्ष्य सम्यक् ।
स्वपुरं प्रतिपद्य चाम्बिकाया
अतनोद्यत्नमसौ हि पुण्यकार्ये ॥ १२ ॥
अथ गुरुवर एष क्षेत्रवर्याण्यटन् स्वै-
र्विनयभरितशिष्यैः प्रार्थितो भक्तिपूर्वम् ।
कुतुकजलधिमग्नान्सर्वलोकान्वितन्व-
न्नभजदतिविशालं क्षौमसालं पुरं तत् ॥ १३ ॥
ஜகத்குரு “இங்கிருந்து திரும்பும்போது, ஸ்ரீ ஜம்புநாதர் கோயிலை அடைந்து, ஸ்ரீ ஜம்புநாதர் மற்றும் அகிலாண்டேஶ்வரியின் தரிசனம் செய்து, செப்பனிடுத்துவதற்கு ஏற்ற தாடங்க ஜோடியை அர்ச்சகர் மூலம் முறையாக ஆராய்ந்த பின், சௌகர்யப்படி மேலே செல்லுங்கள்” என்றார்.
ஸதாசிவர் “தங்கள் அநுக்ரஹத்தை என் சிரஸால் ஏற்கிறேன்”, என்று கூறி, ஸாஷ்டாங்க நமஸ்காரத்துடன் ஆசியும் அனுமதியும் பெற்று வெளியே சென்றார்.
அதன் பின் அங்கு இரண்டு நாட்கள் தங்கி, ஜகத்குருவின் அனுமதி பெற்று, தூய நதியான ஸஹ்யமலையின் மகளால் (காவேரியால்) அலங்கரிக்கப்பட்ட அப்புனித ஜம்புநாத ஆலயத்தை அடைந்து, விரும்பிய பலன்களை வழங்கும் புகழ்பெற்ற ஶம்பு மற்றும் அகிலாண்டேஶ்வரியின் தெய்வீக உருவங்களை நமஸ்கரித்தார்.
அங்கு ஒரு நாள் மகிழ்வுடன் தங்கி, தாடங்க ஜோடியை முறையாக ஆராய்ந்து, தனது நகருக்குத் திரும்பி, அம்பிகைக்கான இப்புனித பணிக்கான முயற்சிகளை செய்தார்.
பின்னர் பெருமை மிக்க குரு, பணிவான சிஷ்யர்களால் பக்தியுடன் வேண்டப்பட்டு சிறந்த புண்ய தலங்களுக்குப் யாத்திரை செய்வதற்காக, அனைத்து மக்களையும் ஆனந்தக் கடலில் மூழ்கடித்து, பட்டுக்கோட்டை என்ற பெரிய நகரை அடைந்தார்.
तत्र च दक्षिण-देश-शेखरी-भूतः सहज-सञ्जात-श्रीगुरुचरण-सरोज-भक्तिः प्राक्कृत-श्रीमदाचार्यवर्य-व्यास-पूजा-परिचर्या-लब्ध-श्रेयोऽभिवृद्धिः स्वशासनाधीनीकृत-तद्देशीयजननिकरः प्रवर्तयिता गोष्ठीनाम् अग्रगण्यो धैर्यशालिनां श्रीमदात्मनाथ-क्षेत्रालङ्कार-भूतः एकाम्रनामा शिष्यशिखामणिः श्रीजगदाचार्यपादसरोजमूलमाश्रित्य कृतानेकप्रणामपूर्वकम् एतद्वार्षिक-श्रीव्यास-पूजा-महोत्सवं श्रीमदात्मनाथक्षेत्र एव विधाय तत्रत्याः सर्वेऽपि अनुग्राह्याः इति प्रार्थयाञ्चकार ।
श्रीगुरुवरः “एतादृशकार्यनिर्वहणश्रमः प्रागनुभूतचरः भवता। अतः नाधिकं वक्तव्यं श्रीचन्द्रमौळीश्वरसङ्कल्पानुसारं भवदिष्टसिद्धिर्भवेद्” इति प्रसादं दत्त्वाऽन्वग्रहीत् । सोऽपि महता मोदेन स्वं ग्राममासाद्य पूर्वमनुभूततया श्रीपूजाब्राह्मणसमाराधनादीनां योग्यं यद्यत्करणीयं तत्कर्तुमारभत ।
अथ गुरुवर एष क्षौमसाले जनाना-
मभिमतमनुसृत्य स्वल्पकालं च नीत्वा ।
गमनसरणिमध्ये प्राप्य किञ्चिद्विलम्बं
विमलमभजदाशु ह्यात्मनाथस्थलं तत् ॥ १४ ॥
तत्रस्थाः शिष्यवर्गाः गुरुवरचरणे प्रार्थयन्भक्तिपूर्वं
“कार्या याऽऽचार्यवर्येह शरदि महिता पुण्यदा सेवितॄणाम् ।
क्षेत्रेऽस्मिन्नात्मनाथक्षपितकलिमले पूतपूते मनोज्ञे
कृत्वा तां व्यासपूजां कलय जनचयान् धन्यधन्यानिहस्थान् ॥”
ततः एकाम्राख्येण शिष्येण स्वनिवासाय सज्जीकृतं समुचितं स्थानम् अधिगम्य तद्दिनकृत्यमखिलमपि नियममन्वतिष्ठदाचार्यवर्यः ।
अन्येद्युर्लसदात्मनाथसदने श्रीव्यासपूजाकृते
बाह्ये वातपुरीशसन्निधिगते रम्ये महामण्डपे ।
जातीचम्पकमल्लिकादिकुसुमैः सम्यक्कृतालङ्कृति-
स्थानं मञ्जुतमं सुगन्धभरितं सज्जीकृतं चोषसि ॥ १६ ॥
அங்கே, தென்னாட்டின் முடிமணியாகவும், ஸ்ரீ குருவின் பாத கமலங்களில் ஸ்வபாவமாகவே பக்தி கொண்டவராகவும், ஸ்ரீ ஆசார்யரின் முந்தைய வருடத்து வியாஸ பூஜையில் கைங்கர்யம் மூலம் கிடைத்த அதிகரித்த புண்ணியம் உடையவராகவும், அந்தப் பகுதி மக்கள் பலரை தனது அதிகாரத்தின் கீழ் கொண்டவராகவும், ஸபைத் தலைவர்களிலும் வீரம் கொண்டவர்களிலும் முதன்மையானவராகவும், ஸ்ரீ ஆத்மநாதஸ்வாமி கோயிலின் அலங்காரமாகவும் விளங்கிய ஏகாம்ரர் என்ற சிஷ்யசிகாமணி – ஸ்ரீ ஜகத்குருவின் பாத கமலங்களில் சரணடைந்து பல ஸாஷ்டாங்க நமஸ்காரங்களுக்குப் பின், இவ்வாண்டின் ஸ்ரீ வியாஸ பூஜை ஸ்ரீ ஆத்மநாதஸ்வாமி கோயிலிலேயே நடத்தப்பட வேண்டும் என்றும், அங்குள்ள அனைவரும் அனுக்ரஹிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டினார்.
பெருமைமிக்க குரு “இத்தகைய பணிகளை செய்வதில் உங்களுக்கு முன் அனுபவம் உள்ளது. எனவே, நான் மேலும் எதுவும் சொல்ல வேண்டியதில்லை. ஸ்ரீ சந்திரமௌலீஶ்வரரின் எண்ணப்படி உங்கள் விருப்பங்கள் நிறைவேறட்டும்” என்று ஆசி வழங்கினார். ஏகாம்ரரும், பெருமகிழ்ச்சியுடன் தனது கிராமத்தை அடைந்து, பிராம்ஹணர்களின் ஸமாராதனை போன்ற பிற கார்யங்களை தன் முந்தைய அனுபவத்தின்படி முறையாக நடத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்யத் தொடங்கினார்.
பின்னர் பெருமைமிக்க குருவானவர், பட்டுக்கோட்டையில் உள்ள மக்களின் விருப்பங்களின்படி சிறிது காலம் அங்கு தங்கி, யாத்திரை பாதையின் நடுவில் சிறிது தாமதம் ஆகியும், விரைவாக அந்த புனிமான ஆத்மநாதஸ்வாமி கோயிலை அடைந்தார்.
அங்கே, சிஷ்யர்களின் குழுக்கள் ஜகத்குருவின் பாதங்களில் பக்தியுடன் : “ஆசார்யவர்யரே, ஸேவிப்பவர்களுக்கு புண்யத்தை அளிக்கும் சிறந்த வ்யாஸ பூஜையை, இவ்வருடம், ஆத்மநாத ஸ்வாமியால் கலியின் மாசுகள் நீங்கப்பெற்று மிகப் புனிதமானவும் அழகாகவும் விளங்கும் இந்த க்ஷேத்ரத்தில் நடத்தி, இங்குள்ள மக்கள் குழுக்களை முற்றிலும் ஆசீர்வதிக்க வேண்டும்” என்று வேண்டினர்.
பின்னர் பூஜ்ய ஜகத்குரு, ஏகாம்ரர் என்ற சிஷ்யரால் தனது வாஸத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட தக்க இடத்தை அடைந்து, அனைத்து தினசரி நியமங்களையும் வழக்கங்களையும் அனுஷ்டித்தார்.
மறுநாள் காலையில், ஆத்மநாதஸ்வாமியின் ஒளிமயமான கோயிலில் ஸ்ரீ வியாஸ பூஜை நடத்தப்பட வேண்டிய வாதபுரீசர் கோயிலுக்கு அருகிலுள்ள பெரிய வெளிப்புற மண்டபத்தில், விடியற்காலையில் மிகவும் அழகான இடம் தயார் செய்யப்பட்டு, மல்லிகை, சம்பங்கி, ஜாதி மற்றும் பிற மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டு, நறுமணத்தால் நிரப்பப்பட்டிருந்தது.
श्रीलोकगुरुशेखरोऽपि प्रातः चतुर्थघण्टासमये उत्थाय तद्दिवसकरणीयं स्वीयं विशेषानुष्ठानमखिलमपि यथाविधि परिसमाप्य सार्धाष्टमघण्टासमये तत्तद्राजस्थानाद्यथासम्प्रदायं सोपहारं प्रेषितैः सत्प्रतिनिधिभिः श्रीगुरुवरचरण-सरसिज-युगल-सहज-भव-भक्ति-गरिम-दृढ-गुण-समाकृष्टागत-प्रभुतल्लज-निकरैश्च तत्क्षेत्रं परितो विराजमानेभ्यो ग्रामसहस्रेभ्यः अत्यद्भुतम् अतिपवित्रतमं श्रीव्यासपूजामहोत्सवमालोक्य जन्मसाफल्यं सम्पादनीयमिति समायातैः बहुजनसमूहैः निरन्तरं कवचिते तत्क्षेत्रे राजकीयप्रधानाधिकारिभिः महता श्रमेण प्रदर्शितमार्गेण मन्दं मन्दं श्रीचन्द्रमौळीशसदनात् आत्मनाथालये सम्यगलङ्कृतं पूजामण्डपं प्रतिपद्य पूर्वं तत्तदेवस्थानादागतदेवताप्रसादान् यथाक्रमं परिगृह्य तदनुपूजामुपक्रम्य विधिवद्व्यतानीत् ।
सर्वान्व्यासमुखानृषीन्निजगुरून्संपूज्य भक्त्या भृशं
श्रीमद्देशिकराडुपागतजनान्दूरात्प्रसादेप्सया ।
आलोक्याशु कृपारसार्दितमहापूतस्वदृष्ट्या मुदा
प्रादाच्छिष्यगणस्य सर्वफलदं व्यासप्रसादं तदा ॥ १७ ॥
इत्थं यथावदखिलान्यपि तत्र कृत्वा
श्रीचन्द्रमौलिविलसत्सदनं च तस्मात् ।
आगत्य पूजनमथाकलयच्छशाङ्क-
चूडस्य सर्वजनतापरिसेव्यमानः ॥ १८ ॥
ஜகத்குருமார்களின் மணிமுடி போன்றவரும், அதிகாலை 4 மணிக்கு எழுந்து, அன்று செய்ய வேண்டிய அனைத்து சிறப்பு அனுஷ்டானங்களையும் முறையாக முடித்து, காலை 8.30 மணிக்கு, அற்புதமான மற்றும் மிகவும் தூய்மையான ஸ்ரீ வ்யாஸ பூஜையை கண்டு தங்கள் பிறவியின் பயனை அடைய வேண்டும் என்று நினைத்து கோயிலைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்து வந்தவர்கள் நிரம்பியிருந்த அந்த கோயிலில், பல்வேறு ராஜ ஸம்ஸ்தானங்களிலிருந்து மரபின்படி காணிக்கைகளுடன் அனுப்பப்பட்ட முறையான பிரதிநிதிகளும் ஜகத்குருவின் பாத கமலங்களில் பக்தியின் இயற்கையான மேன்மையின் உறுதியான குணங்களால் ஈர்க்கப்பட்ட முக்கிய மக்கள் குழுக்களும் சூழ்ந்த இடத்தில், முதன்மை அரச அதிகாரிகளால் பெரும் முயற்சியுடன் காட்டப்பட்ட பாதையில் மெதுவாக முன்னேறி, ஆத்மநாத கோயிலில் நன்கு அலங்கரிக்கப்பட்ட வழிபாட்டு மண்டபத்தில், சந்திரமௌலீஶ்வரர் ஸந்நிதியை அடைந்து, முதலில் பல்வேறு கோயில்களிலிருந்து வந்த தெய்வீக காணிக்கைகளை வரிசையாக ஏற்று, பின்னர் வழிபாட்டைத் தொடங்கி, விதிகளின்படி அதை நிறைவேற்றினார்.
வியாஸர் முதலான அனைத்து ரிஷிகளையும் தனது குருமார்களையும் தீவிரமான பக்தியுடன் வழிபட்டு, அனுக்ரஹத்தை விரும்பி தொலைவிலிருந்து வந்தவர்களை கருணையால் உருகிய தனது பெரிய தூய பார்வையால் பார்த்து, பின்னர் அனைத்து பலன்களையும் வழங்கும் வியாஸரின் ப்ரஸாதத்தை சிஷ்யர் கூட்டத்திற்கு மகிழ்ச்சியுடன் வழங்கினார்.
இவ்வாறு அங்கு எல்லாவற்றையும் முறையாகச் செய்து, ஸ்ரீ சந்திரமௌலீஶ்வரர் ஸந்நிதிக்கு வந்து, அனைத்து மக்களும் சேவை செய்ய, சந்திரசேகரனின் (சிவன்) வழிபாட்டை நிறைவேற்றினார்.
ततः, रात्रौ सार्धसप्तमघण्टासमये श्रीमदात्मनाथदर्शनाय सपरिवारः प्रतस्थे श्रीलोकगुरुवरः तत्र प्रधानाधिकारिणा सभक्तिश्रद्धमुपचर्यमाणः पूर्वं श्रीविघ्नेश्वरं संसेव्य पश्चात् कैलासमिव सविलासं बालदिनकरनिकरविराजमानदीपमालामण्डितं पुरोमण्डपमासाद्य भगवन्तं करुणानिधिं सुन्दरतरमिन्दुशेखरमन्तर्ध्यात्वा एवं स्तोतुमुपाक्रमत ।
பின்னர், இரவு 7:30 மணிக்கு, மாபெரும் ஜகத்குரு தனது பரிவாரத்துடன் ஸ்ரீ ஆத்மநாதரின் தரிசனத்திற்காக புறப்பட்டார். அங்கே, முதன்மை அதிகாரியால் பக்தி மற்றும் நம்பிக்கையுடன் சேவை செய்யப்பட்டு, முதலில் ஸ்ரீ விக்னேஶ்வரரை வழிபட்டு, பின்னர் கைலாசம் போல் பிரமாண்டமான, இளஞ்சூரியனின் கதிர்கள் போல் ஒளிரும் விளக்குகளின் வரிசைகளால் அலங்கரிக்கப்பட்ட முன் மண்டபத்தை அடைந்து, உள்ளத்தில் கருணைக் கடலான, அழகிய சந்திரசேகரனாகிய இறைவனை தியானித்து, இவ்வாறு துதிக்கத் தொடங்கினார்:
यया तव दृशा विभो भवजदुःखहन्त्र्याऽतनोः
र्विलोक्य सदनुग्रहं गिरिश वातपूरीशितुः ।
तया स दयया कदा महितयाऽऽत्मनाथ प्रभो
निरीक्ष्य वितनिष्यसे जनमिमं कृतार्थं भृशम् ॥ १९ ॥
अपि च,
असङ्ख्यसुरकोटिषु प्रविलसत्स्वपि त्र्यंबक
त्वमेव शरणं ममेति च विहाय सर्वान्सुरान् ।
गतं निकटमद्य मां त्यजसि चात्मनाथेश चेद्
भजेयमितरं कथं भवति वा दयालुश्च कः ॥ २० ॥
ஓ இறைவ! உலக வாழ்க்கையின் துயரங்களை அழிப்பவரே, வாதபுரீஶ்வரரை (மாணிக்கவாசகர்) கிருபையுடன் பார்த்த அதே கருணையால், ஓ ஆத்மநாத பிரபுவே, எப்போது என்னையும் பார்த்து முற்றிலும் நிறைவடையச் செய்வீர்?
மேலும்:
‘முக்கண்ணனே! எண்ணற்ற கோடி தேவர்கள் ஒளிர்ந்தாலும், பிற தேவர்கள் அனைவரையும் விட்டுவிட்டு “நீ மட்டுமே என் அடைக்கலம்” என்று அருகில் வந்த என்னை, ஓ ஆத்மநாத பிரபுவே, நீர் கைவிட்டால், நான் வேறு யாரை வழிபட முடியும், உன்னை விட யார் கருணை உள்ளவர்?’
किं च,
शंभो वातपुरीश्वरेण गदितां श्रीपाण्ड्यमुद्दिश्य तां
वाचं पालयितुं विधाय सकलान्क्रोष्टॄन्हयानुत्तमान् ।
गत्वा तद्विलसद्गणैः सह मुदा वेदाश्वमारुह्य च
द्राक्तस्मै तुरगान्विभोऽर्पितवतः किं दुष्करं स्यात्तव ॥ २१ ॥
ஶம்பு! ஸ்ரீ பாண்டியனிடம் வாதவூரர் கூறிய வார்த்தைகளை நிறைவேற்ற, அனைத்து நரிகளையும் சிறந்த பரிகளாக ஏற்பாடு செய்து, ஒளிரும் பரிவாரங்களுடன் மகிழ்ச்சியுடன் சென்று வேதமெனும் குதிரையில் ஏறி – அவருக்கு விரைவாக குதிரைகளை வழங்கிய உமக்கு கடினமானது தான் என்ன?
ततः सकलभुवनजननीं योगाम्बिकानाम्नीं श्रीभगवतीम् अन्यान्यपि दैवतानि यथासम्प्रदायं संसेव्य श्रीचन्द्रमौळीश्वरनिवासगेहमभजत् । अपरेद्युःप्रभृति पञ्चषदिनानि देशान्तरादागतपण्डितमण्डलीभ्यः शास्त्रवाक्यार्थवर्णनसदुपन्यासादिकं च विधाय स्वग्रामं प्रतिजिगमिषून्विदुषः क्रमेण तत्तदुचितमर्यादानुग्रहदानपुरःसरं प्रैषिषदाचार्यवर्यः ।
பின்னர், யோகாம்பிகை என்ற லோகமாதாவையும் பிற தெய்வங்களையும் மரபுபபடி வழிபட்டு, ஸ்ரீ சந்திரமௌலீஶ்வரர் வசிப்பிடத்தை அடைந்தார். அடுத்த நாள் முதல் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு, பிற பகுதிகளிலிருந்து வந்திருந்த அறிஞர்கள் குழுக்களுக்கு வாக்யார்த்தங்களை விளக்கும் முறையான உபதேச்ஙக்ளை வழங்கிய பின், பூஜ்ய ஜகத்குரு தங்கள் கிராமங்களுக்குத் திரும்ப விரும்பிய வித்வான்களை தகுந்த மரியாதை மற்றும் ஆசிகளுடன் அனுப்பி வைத்தார்.
अथ प्रतिदिवसमपि प्रातः पञ्चमघण्टासमये श्रीजगद्गुरुसार्वभौमः आलये यत्र देशे लोकोद्धारणार्थं करुणया श्रीपरमेश्वरः दक्षिणामूर्तिरूपमधिगम्य निवसन् पुण्यशालिभ्यः शिष्येभ्यः स्वयं तत्त्वोपदेशमकार्षीत् तादृशं पूततमं श्रीकुन्दवृक्षमूलं प्रतिपद्य काष्ठवद्विराजमानः एकान्ते अष्टमघण्टावधि किमपि तत्त्वं ध्यायन् समयं नीत्वा श्रीमदद्वैतवेदान्तभाष्यपठनाय सन्नद्धानामास्तिकशिष्यसार्थानां प्रार्थनया निशिततरनियमपूर्वकं तत्रैव दशघण्टापर्यन्तं तेभ्यो भाष्योपदेशं विधाय तदनु, क्रमेण श्रीमदात्मनाथादिदर्शनपूर्वकं स्वसदनं संप्राप्य श्रीचन्द्रमौलीश्वराराधनतत्परोऽभूत् ।
மேலும்:
பின்னர் தினமும் அதிகாலை 5 மணிக்கு, ஜகத்குரு, பரமேஶ்வரர் தக்ஷிணாமூர்த்தி வடிவில் எழுந்தருளி, உலகத்தை உயர்த்துவதற்கான கருணையால் தகுதியான சிஷ்யர்களுக்குத் தானே போதித்து அருள் வழங்கிய மிகவும் தூய்மையான குந்தமரத்தின் அடியை அடைவார். காலை 8 மணி வரை ஆத்ம தத்த்வத்தை தியானித்து அங்கு தனிமையில் அசையாமல் அமர்ந்திருந்து, பின்னர் ஸ்ரீ அத்வைத வேதாந்த பாஷ்யத்தை கேட்கத் தயாராக இருந்த ஆஸ்திக சிஷ்யர் குழுக்களின் வேண்டுகோளின்படி, விதிகளைப் பின்பற்றி காலை 10 மணி வரை அங்கேயே அவர்களுக்கு பாஷ்யத்தில் உபதேசம் வழங்கி, அதன் பிறகு, ஸ்ரீ ஆத்மநாதர் மற்றும் பிறரின் தரிசனத்தை வரிசையாகப் பெற்ற பின், தனது வசிப்பிடத்தை அடைந்து, ஸ்ரீ சந்திரமௌலீஶ்வரரின் வழிபாட்டில் ஆழ்ந்தார்.
इति स कुतुकमस्यामात्मनाथीयपुर्यां
भुवनगुरुवरोऽसौ सन्ततं वीतविघ्नम् ।
कलितनियमबृन्दो ध्याततत्त्वस्वरूपः
समयमगमयद्धि स्वीयशिष्यप्रपूज्यः ॥ २२ ॥
இவ்வாறு இந்த ஆத்மநாதரின் ஊரில், சிறந்த லோக குரு, நியமங்களுடன் ஒன்றுகூடி , தத்வஸ்வரூபத்தை தியானித்து, தனது சிஷ்யர்களால் வழிபடப்பட்டு, தடையின்றி தொடர்ந்து குதூஹலத்துடன் காலத்தைக் கழித்தார்.
इत्थं कृपाभरजुषा गणपत्यभिख्य-
श्रीमद्गुरोर्मृडवधूकरुणाप्तिहेतोः ।
पञ्चापगेशकविना रचितेऽत्र चम्पू-
ग्रन्थे समाप्तिमगमत् स्तबको द्वितीयः ॥ २३ ॥
இவ்வாறு கணபதி என்ற பெயருடன் அனுக்ரஹிக்கப்பட்ட (வித்யா)குருவின் கருணையால், சிவனின் துணைவியின் அருளைப் பெறுவதற்காக, கவிஞர் பஞ்சாபகேச சாஸ்திரிகளால் இயற்றப்பட்ட இந்த சம்பூ நூலில், இரண்டாம் அத்தியாயம் முடிவுற்றது.